சதுப்பு நிலத்தில் சிக்கிய முதியவரை காவலர் மீட்கும் வைரல் வீடியோ

230
Advertisement

சதுப்பு நிலத்தில் சிக்கிய முதியவரை காவலர் மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சதுப்பு நிலா பகுதி ஒன்றில் ,முதியவர் சிக்கியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துரை முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கான்ஸ்டபிள் சந்தேஷ் குமார்,தாமதிக்காமல் கயிறை உடம்புடன் கட்டிக்கொண்டு  முதியவர் சிக்கியுள்ள சதுப்பு நிலத்தில் இறக்கி அவரை மீட்டார்.

சிறு  காயங்களுடன் முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.காவலர் சந்தோஷ் குமார் முதியவரை மீட்கும் வீடியோவை ஆக்ரா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.