விமானநிலையத்தில் பீதியை கிளப்பி மகிழ்ந்த நபர்

217
Advertisement

மத்தவங்கள பயமூட்டி மகிழும் சில நபர்கள் அணைத்து இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இந்நிலையில், 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று மீண்டும் சமூக ஊடகங்களில்  வைரலாகி வருகிறது.

வைரலாகும் இந்த வீடியோவில்,லண்டன் விமான நிலையத்தில் ஊர் திரும்பிய பயணிகள் தங்கள்  பைகளை எடுக்க  கன்வேயர் பெல்ட்டுக்கு அருகில் நின்றுகொண்டு உள்ளனர்.திடிர்யென  கன்வேயர் பெல்டில்  பிணம் ஒன்று வெள்ளை துணியில் சுற்றப்பட்டு,நன்றாக இறுக்கி கட்டியபடி வந்துள்ளது.

அங்கு காத்துகொண்டு இருந்த பயணிகள் இரு நிமிடத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.ஆனால் இதனை அருகில் மறைந்து நின்று படம்பிடித்துக்கொண்டு இருக்கும் நபர்,பயணிகளின் முகத்தோற்றம் மாறுவதை ரசித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த வீடியோயை அவர்  பகிர்ந்தபின் தான் தெரிந்தது,அந்த பிணத்திற்கு சொந்தக்காரர் இவர் தார் என்று.மற்றொரு குழப்பமும் தீர்ந்தது.அது என்னனா,மொத அது பிணம் எல்லாம் இல்லை,அந்த நபர் தனக்கு பிடித்த மனித வடிவிலான விளக்கு  ஒன்றை வாங்கிவந்துள்ளார்.

அந்த வகை விளக்கு மனிதனின் உடலமைப்பை  போலவே வடிவமைக்க பட்டிருக்கும்.மனிதனின்  உயரம் மற்றும் உடலமைப்பை கண்டு பயணிகள் குழம்பிவிட்டனர்.இந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டுருந்தாலும் மீண்டும் வைரலாகி வருகிறது.