மணமேடையில் மரணபயத்தை காட்டிய கல்யாண பெண்

252
Advertisement

இந்தியாவில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் முன்பு போல் இல்லை.வருங்கால மனைவி/கணவரை திருமணத்திற்கு முன்பே நேரில் சந்தித்து இடைப்பட்ட நாட்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.

இருப்பினும் இது அணைத்து இடங்களிலும் இப்படி நடப்பதில்லை, இன்றும் இந்தியாவில் உள்ள சில  கிராமப்புறங்களில் பழைய முறையிலேயே நடக்கிறது.

இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட திருமணம்  உங்களின் மோசமான கனவாக மாறிவிட்டதாக இணையவாசிகள் கேலி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொள்ளவேண்டும்,

முதலில் மணமகள் மாலையை மணமகன் கழுத்தில் போடவேண்டும். மாலையை கையில் பிடித்தபடி மலையை மாப்பிள்ளையின் கழுத்தில் போடும் அந்த மணப்பெண் போட்டோவிற்கு போஸ் கொடுக்க சொன்னபோது, ராகவா லாரன்ஸ் படத்தில் வரும் காஞ்சனா பேய் மாதி முறைத்து பார்க்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மணமகளின்  செயலை பார்க்கும் இணையவாசிகள் கேமரா மேனுக்கு மரணபயத்தை காட்டிவிட்டதாக வேடிக்கையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.