உத்தரப்பிரதேசத்தில் மதுபான ஊழல் : அமலாக்கத்துறை விசாரிக்க அதிஷி வலியுறுத்தல்!

உத்தரபிரதேசம் மாநிலம் தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் மதுக்கடைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இது ஆளும் பாஜக அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, “நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்…இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related News

Latest News