தமிழக தேர்தல் ; புதுவையில் விடுமுறை கோரிக்கை… ஆளுநருக்கு மனு தாக்கல்…

புதுச்சேரியில் வசித்து கல்வி கற்கும் மற்றும் பணிபுரியும் தமிழக வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, ஆளுநருக்கு அனுப்பிய மனுவில், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் வசிக்கும் பலரும் தமிழகத்தை சேர்ந்த வாக்காளர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அதிக அளவில் புதுச்சேரி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தை சேர்ந்த பலர் அரசு மற்றும் தனியார் துறைகளில் புதுச்சேரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு தேவையான நேரமும் வசதியும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த கோரிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிலையில், ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டால், புதுச்சேரியில் இருக்கும் தமிழக வாக்காளர்கள் எளிதில் தங்கள் சொந்த பகுதிகளுக்கு சென்று வாக்களிக்க முடியும். இது ஜனநாயக கடமையை நிறைவேற்ற உதவும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News