சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது தெரியுமா?

444
Advertisement

பொதுவாக சாப்பிடும் போது பேசக்கூடாது என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால், அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையை தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. தொண்டையில் இருந்து செல்லும் உணவுக்குழாயும், மூக்கில் இருந்து செல்லும் மூச்சுக்குழாயும் ஓரிடத்தில் சந்திக்கின்றன.

மூச்சுக்குழாய் எப்போதும் திறந்தே இருக்கும் நிலையில், உணவு உட்கொள்ளப்படும் போது மட்டும் உணவுக்குழாய் திறக்கப்பட்டு மூச்சுக்குழாய் மூடிக் கொள்ளும். உணவு உள்ளே சென்றதும் மீண்டும் மூச்சுக்குழாய் திறந்து கொள்ளும்.

இயல்பாக நிகழும் இந்த செயல்பாட்டில், இடையிடையே பேசுவதால் இடையூறு ஏற்பட்டு உணவு மூச்சுக்குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு அதிகமாகிறது. இது போன்ற சூழல்களில் ஏற்படும் திடீர் இருமலையே புரையேறுதல் என குறிப்பிடுகிறோம்.

தூங்கும் போது சில நேரங்களில் உமிழ்நீர் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிட்டாலும் கூட புரையேறும். இதுவே, தூக்கத்தில் புரையேறுவதற்கான காரணம்.

அது மட்டுமில்லாமல், நொறுங்க தின்றால் நூறு வயது என்னும் பழமொழிக்கேற்ப பேசாமல் சாப்பிடும் போது உணவை நன்கு மென்று சாப்பிட முடியும்.

மேலும், உணவு உண்ணும் போது பேசாமல் முழு கவனம் செலுத்தும்போது, உணவு போதும் என்ற செய்தியை மூளையால் தெளிவாக உடலுக்கு பரிமாற முடியும்.

இதனால், தேவைக்கு அதிகமான உணவு உண்ணுதல் மற்றும் அதனால் ஏற்படும் உடல் பருமன் போன்ற சிக்கல்களையும் சுலபமாக தவிர்க்கலாம்.