Advertisement

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி வீர் பூமியில் அஞ்சலி செலுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்றும், அவரது கொள்கைகள் நவீன இந்தியா உருவாவதற்கு உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இரக்கமுள்ள, கனிவான மனிதர் என்றும், எனக்கும், எனது சகோதரி பிரியங்கா காந்திக்கும், மன்னிப்பு மற்றும் மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்வதன் மதிப்பைக் கற்றுக்கொடுத்த மிகச் சிறந்த தந்தை எனவும் புகழாரம் செலுத்தியுள்ளார்.

மேலும் இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.