கைதாகிறாரா நீயா நானா கோபிநாத்? பற்றவைத்த தெருநாய்கள் சர்ச்சை

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ விவாத நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தெருநாய்கள்” குறித்த விவாதமே இந்த நிகழ்ச்சியின் மையப்புள்ளியாக இருந்தது. தெருநாய்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளும், அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற வாதங்களும் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டன. இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு கிளம்பி, நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சர்ச்சைக்கிடையே, கோபிநாத் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் தலைதூக்கியது. ஆனால் உறுதியான தகவல்களின்படி, கோபிநாத் மீது எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில், அவருக்கு எதிராக ஒரு வக்கீல் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இது சட்ட ரீதியான எச்சரிக்கை மட்டுமே. அது கைது குறித்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் சில உறுப்பினர்கள், இந்த நிகழ்ச்சியில் தெருநாய்கள் குறித்து தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதனால், நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலம் வந்தது.

இந்நிலையில், கோபிநாத் கைது செய்யப்படவிருப்பதாக பரவிய தகவல்கள் அனைத்தும் வதந்தி மட்டுமே. அவர் மீது சட்ட ரீதியான எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை எனவும், தற்போது வரை வக்கீல் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News