பஜ்ஜி சாப்பிட்டு தாய்-மகன் உயிரிழப்பு

229
bajji
Advertisement

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் பார்வதி. இவரது மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயம் தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பிய இருவரும் பஜ்ஜி செய்து சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேதப் பரிசோதனைக்கு பிறகே அவா்களது இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.