Saturday, December 6, 2025

தண்டவாள மின் கம்பியில் மோதிய ரயில் : பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

குஜராத் மாநிலம் கோத்ரா அருகே பகீரத் சுரங்கத்தில் சுரங்க வெடிப்பு ஏற்பட்டது. இதில் பெரிய கல் ஒன்று அருகில் இருந்த ரயில் தண்டவாள மின் கம்பியில் மோதியது.

இதில் ரயில் என்ஜின்களுக்கு மின்சாரத்தை வழங்கும் கான்டிலீவர் சேதமடைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அவ்வழியாக வந்த சரக்கு ரயிலை நிறுத்த சிகப்பு நிற துணியை அசைத்து ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுத்தனர். உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News