பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் எல்லை பாதுகாப்புப்படையில் பாகிஸ்தான் தாக்குதலின்போது ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த முரளி நாயக் என்ற இந்திய வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.