“கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்”

187

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க உந்துதல் தேவை என்று கூறினார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன், ஜூலை மாதங்களில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மாநில சுகாதாரத்துறை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றும், தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்தவில்லை என்பதையும், தடுப்பூசிகளை வீணாக்காமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.