Wednesday, June 4, 2025

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்

வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

தற்போது, ​​மாதத்திற்கு 5 முறை ஏடிஎம்களில் இருந்து இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு, பணம் எடுப்பதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த சேவை கட்டணத்தை ரிசர்வ் வங்கி அதிகரிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏடிஎம்களில் இருந்து 5 முறை பணம் எடுத்த பிறகு, ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரூ.22 ஆக அதிகரிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news