Airtel க்கு போட்டியாக Jio எடுத்த அதிரடி முடிவு!!

இந்திய டெலிகாம் துறையில் போட்டி தற்போது முக்கியமாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு இடையே உள்ளது. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கட்டண உயர்வு தொடர்பான விவாதம் நீடித்து வரும் நிலையில், தற்போது Base Plan தொடர்பான போட்டி தீவிரமடைந்துள்ளது.

ஏர்டெல் தனது ரூ.299 அடிப்படை திட்டத்தை நீக்கி, குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.349 ஆக மாற்றியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மறைமுக கட்டண உயர்வாக பார்க்கப்படுகிறது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஜியோ தனது ரூ.299 அடிப்படை திட்டத்தை தொடர்ந்து வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் ஆண்டுக்கு ரூ.300 செலுத்தும் Jio Prime உறுப்பினர் திட்டத்தையும் தொடர்கிறது. இதன் மூலம் எதிர்கால கட்டண உயர்வுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் ஓரளவு பாதுகாப்பைப் பெற முடியும். ஜியோவின் IPO திட்டமும், வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இதற்கிடையே, வோடபோன் ஐடியாவும் ரூ.299 திட்டத்தை நீக்காமல் தொடர்கிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களில் சிலர் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறும் வாய்ப்பை பயன்படுத்தி தனது பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க Vi திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மாற்றத்தின் உண்மையான தாக்கத்தை அறிய குறைந்தது ஒரு காலாண்டு தரவுகள் தேவைப்படும்.

Related News

Latest News