9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு: பார்த்து ரசித்த முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டது தமிழக அரசியலில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி அறுதிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னை நகரில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

“C. ஜோசப் விஜய் எனும் நான்…” என்று உணர்ச்சி பொங்க உறுதிமொழி ஏற்றுக்கொண்ட விஜயை காண அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக கோஷங்களை எழுப்பினர். அந்த தருணம் விழாவின் மிகச் சிறப்பான தருணமாக அமைந்தது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டு அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாக கருதப்படுகிறது.

முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவை உறுப்பினர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றுக்கொண்டனர். முதலில் புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவியேற்றார். பின்னர் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்கும் போது, அருகில் அமர்ந்திருந்த முதலமைச்சர் விஜய் புன்னகையுடன் அவர்களை பாராட்டியும் வாழ்த்தியும் காணப்பட்டார். இதனால் விழா முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது.

Related News

Latest News