சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால் அந்த பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவில் இன்று காலை முதலே பறவைகள் ஒவ்வொன்றாக இறந்த வண்ணம் இருந்தன. கரண்டிவாயன், நாரை, கூழைக்கடா, செங்கால் நாரை, கொக்குகள் உள்பட 20-க்குமே் மேற்பட்ட பறவை இறந்துள்ளன.
இவற்றை சோதனை செய்ததில் அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது. பறவைகளின் எச்சம், அதன் பாகங்கள், இரக்கைகள், முடிகள் உள்ளிட்டவைகளின் மூலம் வைரஸ் கிருமி மக்களுக்கு தொற்றும் என்பதால் பூங்கா மூடப்பட்டுள்ளது.
