தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில், பிற வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்றுடன் தேர்வு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது.
அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் அதாவது நாளை முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 5-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.
விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
