Saturday, December 20, 2025

நாளை முதல் பூந்தமல்லியில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 626 மின்சார பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகளும், 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.

இந்நிலையில் 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Related News

Latest News