ஆம்புலன்ஸ் உயிர் காக்கும் வாகனமாக வளம் வந்து கொண்டு இருக்கிறது. விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயால் துடிப்பவர்களை கோல்டன் ஹவர்ஸ் (பொன்னான நேரம்) என்று அழைக்கப்படும், முக்கிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான் ஆம்புலன்ஸ் வந்தால் முன்னாள் செல்பவர்கள் உடனடியாக வழி விட்டுச் செல்கிறார்கள்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி உள்ளது. அதில் ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் செல்வது போன்று அதன் பின்புறத்தில் உள்ள கதவு தானாக திறப்பது போன்று, அதில் இருந்து நோயாளி ஸ்ட்ரக்சசரோடு சாலையில் விழுவது போன்று இருக்கிறது.
அத்துடன் அது கோவை மாவட்டம் அவினாசி சாலை என்றும் கோவையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்து இருப்பதாகவும், இதனால் தமிழகத்தை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது என்றும், குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பீதியை கிளப்பி உள்ளது.
அந்த வீடியோவை உண்மை என்று பலர் நம்பி உள்ளனர். ஆனால் அது உண்மை இல்லை. ஏ.ஐ தொழில் நுட்ப மூலம் உருவாக்கப்பட்டது. அந்த இடம் அவினாசி சாலை இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிலர் இதுபோன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ விட்டு வருகிறார்கள். அதை உண்மை என்று பலர் நம்பி விடுகின்றனர்.
இதுபோன்ற போலியான வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்புவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
