Wednesday, December 17, 2025

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவு

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது, பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதேபோன்ற திருத்த முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.

நவம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணி, வருகிற டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.

எஸ்.ஐ.ஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் நாளையுடன் (11-12-2025) முடிவடைகிறது.

வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

Related News

Latest News