Thursday, December 25, 2025

மாணவியின் தலையின் ஏறி இறங்கிய லாரி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

கந்திலி அருகே டிப்பர் லாரியை முந்தி செல்ல நினைத்தபோது ஏற்பட்ட விபரீதம்! மாணவியின் தலையின் மீது ஏறி இறங்கிய டிப்பர் லாரி.. இருவர் படுகாயம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. டிப்பர் லாரியை முந்தி சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் எக்ஸாம் எழுத சென்றபோது தன்னுடைய தோழிகளான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்கிறவரையும், அதேபோல ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் வசிக்கும் ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரையும் ஒரே இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அப்போது கந்திலி அருகே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்தி செல்ல முற்பட போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது லேசாக உரசியதில் நிலை தடுமாறி லாரியின் மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது மாணவி ரம்யாவின் மீது டிப்பர் லாரி ஏரி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சக்திவேல் மற்றும் பிரியங்காவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியர் எக்ஸாம் எழுத சென்ற நிலையில் டிப்பர் லாரி மோதி மாணவியின் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இதில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News