Tuesday, July 1, 2025

இந்த திட்டத்தில் சேர்ந்தால் போதும்! ரூ.1.1 லட்சம் உங்க வங்கி கணக்கை தேடி வரும்! மத்திய அரசின் அசத்தல் scheme!

மத்திய அரசின் POMIS என்று சொல்லப்படும் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் மூலம், முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூ. 1.1 லட்சம் வரை வருமானம் பெற முடியும். நாளுக்கு நாள் செலவீனங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் இந்த திட்டம் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு பொருளாதார தேவைகளை சந்திக்க உதவியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

இந்தியக் குடிமகன் அல்லது குடிமகளாக இருக்கும் ஒருவர் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம். மேஜர் வயதை அடைந்தவர்கள் கணக்கு தொடங்க தகுதியானவர்கள். மேலும், மைனர்கள் தங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கண்காணிப்பில் கணக்கு தொடங்க முடியும்.

தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு, ஆதார் அட்டை, அடையாளச் சான்றுக்கு பான் கார்டு போன்ற ஆவணங்கள் இத்திட்டத்தில் சேர அவசியம். இத்திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. ஒரு முதலீட்டாளர் ரூ.15 லட்சத்தை கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்தால், மாதாமாதம் சுமார் ரூ.9,250 வருமானம் பெறலாம். ஆண்டுக்கு சுமார் ரூ.1,11,000 வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்வதன் மூலம், மாதத்திற்கு சுமார் ரூ.5,550 வருமானம் பெற முடியும். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.66,600 வட்டியாக பெறலாம்.

POMIS கணக்கை ஓராண்டுக்கு முன்பு மூட வாய்ப்பில்லை. ஒருவேளை, முதலீட்டாளர் ஒரு வருடத்துக்கு பிறகு, ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை Close செய்தால், 2% விலக்கு பொருந்தும். அதேபோல், மூன்று ஆண்டுகள் முடிந்து, ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை மூடினால், 1% விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news