Wednesday, June 18, 2025

SBI கிரெடிட் கார்டில் வரப்போகுது பெரிய மாற்றம் : ஜூலை 15 முதல் அமல்

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 15 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். இதில், குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) கணக்கிடும் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய முறையில் முழு ஜிஎஸ்டி, EMI, கட்டணங்கள், நிதி சார்ந்த கட்டணங்கள் மற்றும் அதிகப்படியான தொகையும் MAD-க்கு சேர்க்கப்படும். மேலும், MAD தொகையில் நிலுவையில் உள்ள தொகைக்கு 2% கூடுதல் சேர்க்கப்படும்.

பணம் ஒதுக்கப்படும் முறையும் மாற்றப்பட உள்ளது. புதிய வரிசையில் முதலில் ஜிஎஸ்டி, பிறகு EMI, கட்டணங்கள், நிதி கட்டணங்கள், இருப்பு பரிமாற்றங்கள், சில்லறை செலவுகள் மற்றும் ரொக்க முன்பணங்கள் வரிசைப்படுத்தப்படும்.

முக்கியமாக, எஸ்பிஐ கார்டுகள் வழங்கிய இலவச விமான விபத்து காப்பீடு நிறுத்தப்பட உள்ளது. ரூ. 1 கோடி காப்பீடு வழங்கப்பட்ட எஸ்பிஐ கார்டு எலைட், பல்ஸ், மைல்ஸ் எலைட் மற்றும் ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்ட எஸ்பிஐ பிரைம் மற்றும் மைல்ஸ் பிரைம் கார்டுகளுக்கு இந்த காப்பீடு அமலிலிருந்து அகற்றப்படும். இந்த மாற்றங்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news