கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் நாயக். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனுஜா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாது திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதை அறிந்து கொண்ட மனைவி தனுஜா திருமண மண்டபத்திற்கு வந்து கணவனை செருப்பால் அடித்து அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.