Tuesday, June 10, 2025

வேலையை முடிக்காததால் ஊழியர்களை சங்கிலியால் கட்டி இழுத்த கொடூரம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியர்களை சங்கிலியால் கட்டி வைத்து நாய்களைப் போல மண்டியிட்டு நடக்க வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அந்த நிறுவனத்தில் டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் இதை போலி வீடியோ என்றும், சிலர் சித்தரிக்கப்பட்டது என்றும் கூறி வருகின்றனர். எனினும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news