ஒரு தேங்காய் இவ்வளவு ரூபாயா..!!…அதிர்ச்சியில் மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால் சந்தைகளுக்கு வரவேண்டிய தேங்காய்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.

இதன் காரணமாக ஒரு தேங்காய் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News