கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை – பிரதமர் இன்று வழங்குகிறார்

336

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.

இந்நிலையில், பி.எம். கேர்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குழந்தைகளில் பள்ளிக்கு செல்வோருக்கு கல்வி உதவித்தொகையை இன்று காலை காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்ட கணக்கியல் புத்தகம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையும் வழங்கப்படுகிறது.