முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்

299

இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவகர்லால் நேரு1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.