கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இன்று அமெரிக்காவின் துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி பேசியதாவது: பெங்களூருவில் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்பது ஜெய்சங்கரின் எண்ணம். இந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. விசா சேவைகள் உடனடியாக வழங்கப்படாது. ஆனால் விரைவில் விசா சேவை துவங்கும் என கூறியுள்ளார்.