Wednesday, July 2, 2025

கப்லிங் உடைந்து ரயிலின் பெட்டிகள் பிரிந்ததால் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலியில் கப்லிங் உடைந்து ரயிலின் பெட்டிகள் பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

டெல்லியில் இருந்து ஒடிசா சென்ற நந்தன் கண்ணன் ரயில் உத்தரபிரதேசம் சந்தாலியை கடந்தபோது பெட்டிகளின் கப்லிங் உடைந்து ரயில் இரண்டாக பிரிந்தது.

திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சிறிது நேரத்தில் நந்தன் கானன் எக்ஸ்பிரஸ் திடீரென இரண்டு பகுதிகளாகப் பிரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் பெட்டிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news