Tuesday, July 1, 2025

ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து கேம் விளையாடிய 3 பேர் ரயில் மோதி பலி

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து 3 இளைஞர்கள் பப்ஜி கேம் விளையாடி உள்ளனர். அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கேம் விளையாடிக்கொண்டிருந்த 3 பேரும் காதில் ஹெட் போன் அணிந்திருந்ததால் ரயிலின் சத்தத்தை அவர்களுக்கு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. உயிரிழந்த மூவரும் செயின்ட் கொலம்பஸ் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news