Wednesday, February 19, 2025

டோல்கேட்டை கடந்து செல்வதற்காக கட்சி கொடியை பயன்படுத்தியதாக விசாரணையில் தகவல்

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் காரில் வந்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் டோல்கேட்டை கடந்து செல்வதற்காக கட்சி கொடியை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றபடி கட்சிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Latest news