Wednesday, March 12, 2025

சட்னியில் பல்லி : உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருச்செந்தூர் மனப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மாணவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news