Sunday, June 8, 2025

சட்னியில் பல்லி : உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருச்செந்தூர் மனப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மாணவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news