வெறும் வயிற்றில் எலுமிச்சை தேன் தண்ணீர் குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

149
Advertisement

உடல் எடை குறைப்பு, அஜீரண கோளாறுகளை சரி செய்தல், நீரிழப்பை தடுத்தல் மற்றும் பல மருத்துவ பயன்களை பெற்றுள்ளது எலுமிச்சை தேன் தண்ணீர்.

எனினும், இதை தினமும் காலையில் குடிப்பவர்களுக்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பற்களின் enamelஐ அரித்து உராய்வு ஏற்படுத்தக் கூடும். எலுமிச்சை சாறு குடித்த உடனே பல் துலக்குவதும் நிலைமையை மோசமாக்கும் என்பதால் அதற்கு பதிலாக தண்ணீர் பருக வேண்டும். அமிலத் தாக்கம் அதிகமாகும் என்பதால் அல்சர், நாள்பட்ட வயிற்றுப் பிரச்சினை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சை தோலையும் சிலர் சாற்றில் சேர்த்து குடிப்பார்கள். ஆனால், பல வகையான நோய் தாக்கும் கிருமிகள் சுலபமாக எலுமிச்சை தோலில் வளர்வதாக தெரிய வந்துள்ளது.

இதனால், இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும். வாய்ப்புண்களை சிட்ரிக் அமிலம் அதிகரிக்கும் என்பதால், வாய்ப்புண்களை அதிகப்படுத்தும் தன்மை சிட்ரிக் அமிலத்திற்கு உண்டு என்பதால், அந்த பிரச்சினை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சையில் இருக்கும் டிராமின் எனும் உட்பொருள் தலைவலி வருவதற்கு காரணமாக அமைவதால், மைக்ரைன் உள்ளிட்ட உடல் உபாதைகளை தீவிரப்படுத்தும் என கூறும் மருத்துவர்கள், சிறப்பான பலன்களை பெற எலுமிச்சைகளை சரியாக மற்றும் அளவாக பயன்படுத்த வேண்டும் என  அறிவுறுத்துகின்றனர்.