Monday, August 4, 2025
HTML tutorial

கேலிக்கூத்தான போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார் – ஆர்.எஸ் பாரதி விமர்சனம்

பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார். என்றும இது கேலிக்கூத்தாக உள்ளது எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ், பாரதி, பதவிக்கு ஆபத்து, சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செய்தால் நல்லது என்று ஜோதிடர் யாரோ கூறியிருக்கிறார்கள் என்றும், புதிய பதவி கிடைக்கும் என்று ஜோதிடர் சொன்னதால் அண்ணாமலை சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்தபோது அண்ணாமலை எங்கேசென்றார். என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பிய ஆர்.எஸ் பாரதி, பொள்ளாச்சி கொடுமை நடந்தபோது போராட்டத்தை மக்கள் நடத்தினார்கள் என்றும், அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க.வினரே அண்ணாமலையின் இந்த போராட்டத்தை ஏற்பார்களா என்பது சந்தேகம். அரசியலுக்காக கேலிக்கூத்தான போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார். அண்ணாமலை செய்யும் வேடிக்கைகளில் இதுவும் ஒன்று எனவும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News