ரஷ்யாவை எதிர்த்து போருக்கு தயாராகும் உக்ரைனின் முன்னாள் குத்துசண்டை ஜாம்பவான்கள்!

482
Advertisement

போட்டியில் எதிரியை எதிர்த்து சண்டையிட்ட வீரர்கள் தற்போது தாய் நாட்டிற்காக போரில் சண்டையிட உள்ளனர்.

சகோதரர்கள் மற்றும் முன்னாள் குத்துச்சண்டை சாம்பின்களான “விட்டலி மற்றும் விளாடிமிர் கிளிட்ச்கோ ( Vitali and Wladimir Klitschko )ஆகியோர் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா தொடுத்துள்ள போரில் ,

தாய் நாட்டிற்காக சண்டையிட போவதை உறுதி அளித்துள்ளனர்.

( Vitali Klitschko ) விட்டலி கிளிட்ச்கோ தற்போது உக்ரைனின் தலைநகரான கிய்வின் ( Kiev) மேயராக பணியாற்றுகிறார்.

இது குறித்து , பிரிட்டன் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ( Vitali Klitschko ) விட்டலி கிளிட்ச்கோ ,”எனக்கு வேறு வழியில்லை. நான் இதை செய்ய வேண்டும்,”

“நான் போராடுவேன்.” எனக் கூறினார்.

2014 இல் Kyiv நகரின் மேயராகவும், Kyiv நகர மாநில நிர்வாகத்தின் தலைவராகவும் Klitschko பதவியேற்றார்,

தொழில்முறை குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, அவரது சொந்த நாட்டில் ஒரு பெரிய சண்டையில் ஈடுபடப்போவதாகவும் ,

“அங்குள்ள மக்களுக்கு நான் தேவை.
பல வார பதட்டங்களுக்குப் பிறகு, ரஷ்யா கிழக்கு உக்ரைனை ஆக்கிரமித்தது, கியேவ் மற்றும் பிற நகரங்களில் விடியற்காலையில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தியது” எனக் கூறினார்….

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான விளாடிமிர் கிளிட்ச்கோ மற்றும் WBC ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் விட்டலி கிளிட்ச்கோ ஆகியோர்,

நவம்பர் 22, 2013 அன்று உக்ரைனின் கீவ் நகரின் மையத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக இரவு பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , “நாங்கள் முழு பலத்துடன் நம்மைப் பாதுகாத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுவோம்.” என இந்த சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள விருப்பமுள்ள பொதுமக்களுக்கு உக்ரைன் அரசு ஆயுதங்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், உக்ரைன் மீதான போரை, ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்