கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்ற 60 வயது முதியவர், அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தமோதரனை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு பொன்னானி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தாமோதரனுக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.