Saturday, April 19, 2025

ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரி விதிமுறைகள்! முழுமையான விளக்கம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த புதிய வரி விதிப்பு முறைப்படி வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். பழைய அல்லது புதிய வரி விதிமுறைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை என்பது உள்பட சில சலுகைகள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்களின் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சேமிப்பு கணக்குகளில் பெறப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். ஆனால் செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் பங்குசந்தையில் உள்ள பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள், வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விதமான விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டி இருக்கும். அதில் முதலீடுகள், சுகாதார காப்பீடு கல்விக்கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய வரிவிதிப்பு முறை குறைந்த வரிவிகிதங்களை வழங்கும் அதே நேரத்தில் பெரும்பாலான விலக்குகளை அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வருமான வெளியீடு மட்டுமே அவசியமாகிறது. வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்று கூறப்படுகிறது.

வரி செலுத்துவோர் பழைய வரி முறையை தேர்ந்தெடுத்தால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்க வாய்ப்பில்லை. வாடகை ரசீது இதில் சேர்க்கப்படவேண்டும் என்பதோடு வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

Latest news