பாபா வங்கா பற்றி தெரியாதவர்கள் தற்போது யாரும் இல்லை.. அந்த அளவிற்கு அவருடைய கணிப்புகளை பற்றி உலகம் எங்கும் பரவலாக பேசப்பட்டு வருகிறது காரணம்.. தற்போது அவரது கணிப்பு ஒன்று பற்றி பேசுகின்றனர்..
அதாவது பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்து, சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.இவர் 1996ல் மரணமடைந்தார்.
இந்த நிலையில் இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது என்று கூறப்படும் நிலையில்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய அரசு உறுதிப்படுத்திய நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பாபா வாங்கா இந்திய-பாகிஸ்தான் போர் அல்லது குறிப்பாக பாகிஸ்தானின் அழிவு குறித்து அவர் தெளிவான அல்லது நேரடியான கணிப்புகளை கூறவில்லை.
இருப்பினும், அவரது சில அறிக்கைகள் பாகிஸ்தானில் அழிவு மற்றும் பேரழிவுக்கான சாத்தியத்தை கூறும் வகையில் உள்ளதாக கூறுகின்றனர். ஆகையால் இதனை மக்கள் தொடர்புபடுத்தி வருகின்றனர்.தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை அதை பொது மக்கள் நம்பவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்பதால், எது உண்மை என்றும் எது உண்மைக்கு புறம்பானது என்று நிதானிப்பது அவசியம்..