Wednesday, June 4, 2025

மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு எப்போது? – அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த அப்டேட்

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணி குறித்து விளக்கம் அளித்தார்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடைந்த பிறகு மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news