பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மேஜிக் மருந்துகள் சட்டம், 1954 இன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விதமாக விளம்பரம் வெளியிடப்பட்டதாக கேரளா முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் தற்போது அவர்களுக்கு பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து இன்று [திங்கள்கிழமை] நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.