கடைசி நாட்களில் மனோபாலாவிற்கு ஏற்பட்ட கொடுமைகள் ! வீட்டில் இன்று காலை என்ன ஆனது? மரணத்தின் பின்னணி…

204
Advertisement

தமிழ்  திரையுலகில்  மிக முக்கிய நடிகராக  மனோபாலா  திகழ்கிறார்.

இவர் சினிமாவின் அனைத்து துறைகளிலும் வேலை செய்துள்ளார், இவர் இதுவரை 40 படங்கள் மற்றும் 16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார், இந்நிலையில் தனது இல்லத்தில் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த மனோபாலா திடீரென மரணம் அடைந்தார், இவர் எப்படி திடீரென மரணமடைந்தார் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள், சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மனோ பலாவிற்கு.

கல்லீரல் பிரச்சனையும் முன்னதாக இருந்துள்ளது, இதற்காக முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றும் வந்தார்.

அங்கே சிகிச்சை முடிந்தப் பிறகு அவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறி உள்ளனர். ஆனால் வீட்டிற்குச் சென்ற மனோபாலாவிற்கு சில நாட்கள் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது, இன்று அதிகாலை நெஞ்சு வலி அதிகம் ஆகவே அவர் மரணம் அடைந்தார், கடந்த ஜனவரி மாதம் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரின் மரணத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

சினிமா உலத்தில் இவரின் மரணம் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, அனைவரோடும் நட்போடு பழகக்கூடியவர் மனோபாலா, எனவே இவரின் மரணம் சினிமா உலகில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.