Saturday, May 31, 2025

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! இதை நோட் பண்ணுங்க!

8 வது சம்பள கமிஷன் குறித்த கேள்விகளுக்கு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த கமிஷன் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க உள்ளது. எனவே சம்பள கமிஷன் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசு ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஜ்தா அகமது ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது சம்பள கமிஷன் குறித்து சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். குறிப்பாக மத்திய அரசு எட்டாவது சம்பள கமிஷன் அறிக்கையை சமர்ப்பணம் செய்வதற்கு ஏதேனும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்திருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மற்றும் பரிந்துரை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.  மேலும் 8ஆவது சம்பள கமிஷனில் இடம்பெற்றிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேள்விக்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன் தோராயமாக 1.03.2025 நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 36.57 லட்சம் என்றும் 31.12.2024 நிலவரப்படி ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 33.91 லட்சம் என்றும் தெரிவித்தார்.

8ஆவது சம்பள கமிஷனால் ஏற்படும் நிதி தாக்கங்கள் குறித்து அரசு ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டதா அல்லது ஊழியர் சங்கங்களோடு ஆலோசனை நடத்தியதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சகம் , உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் குறிப்பு விதிமுறைகள் குறித்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. புதிய கமிஷன் ஏப்ரல் மாதத்தில் தனது பணியைத் தொடங்கும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவு திருத்தம் குறித்த நம்பிக்கையை எழுப்புகிறது. இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவது முக்கியமானது, மேலும் மிக முக்கியமான மாற்றம் அகவிலைப்படியில் இருக்கும்.

மத்திய ஊழியர்களுக்கு, அகவிலைப்படி பூஜ்ஜியமாக மீட்டமைக்கப்படும். இதன் பொருள் புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தவுடன், அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்திலிருந்து புதிதாகத் தொடங்கும்.

 எதிர்காலத்தில், ஜனவரி 2026 க்குள், அகவிலைப்படி (DA) 61 சதவீதத்தை எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி, புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது, ​​ஊழியர்களுக்கான அகவிலைப்படி பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டு, அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். இந்த ஊதியக் குழுவிலும் இதுவே நடக்கும். இருப்பினும், அகவிலைப்படியில் 50 சதவீதம் மட்டுமே அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படலாம், மீதமுள்ள 11 சதவீதம் இணைப்பிலிருந்து வெளியேறலாம் என்ற பேச்சு உள்ளது. ஆனால் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் அரசாங்கம் எந்த உறுதியான காரணத்தையும் வழங்கவில்லை. இறுதியில், அது புதிய ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news