தற்கொலை செய்தா நண்பர் உடல் மேல் ஏறி அமர்ந்து பூஜைகள் செய்த அகோரி…

109
Advertisement

கோவை மாவட்டம் சூளுரை சேர்ந்தவர் 32 வயதான மணிகண்டன்.

திருமணமான இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மனைவியை பிரிந்த மணிகண்டனுக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவருடன் வாழ தொடங்கினார்.

கடந்த 27-ந் திகதி மணிகண்டனுக்கும், அவருடன் வசித்த பெண்ணுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார்.

மணிகண்டன் இறந்த தகவலை அறிந்த அவர் தனது சீடர்களுடன் புறப்பட்டு கோவை சூலூருக்கு வந்தார்.

தொடர்ந்து இறந்த மணிகண்டன் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அவரது உடல் மீது ஏறி அமர்ந்து தியானம் செய்தார்.

இந்த பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மணிகண்டன் உடல் எரியூட்டப்பட்டது.