Saturday, June 7, 2025

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமியை, அரசு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள், தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாயார் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news