வெயில் காலம் வந்துவிட்டால் நம்மில் பலர் குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். ஒரு சிலர் குளிர்ந்த நீர் சேராது என அதனை தவிர்ப்பவர்களும் உண்டு. மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மிகவும் குளிர்ந்த நீரை குடிப்பதால் செரிமானம் மெதுவாக நடக்கும். இது அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பது சளி, இருமல் மற்றும் பல் உணர்திறனை அதிகரிக்கும்.
மிகவும் குளிர்ந்த நீரை உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே ஒரு பானையிலிருந்து சாதாரண வெப்பநிலை தண்ணீரை குடிப்பது நல்லது. பானை நீருக்கு முன்னுரிமை அளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.