Monday, June 9, 2025

இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்

இந்தியாவின் முதல் முறையாக ரயிலில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்து ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது.

மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனை பெட்டியில் ஏ.டி.எம் இயந்திரத்தை மத்திய ரயில்வே நிறுவியுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சோதனை வெற்றிகரமாக நடந்தது. சில இடங்களில் மட்டும் சிக்னல் பிரச்னை இருந்தது. இனி மக்கள் ஓடும் ரயிலில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்போம், என்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news