Thursday, March 20, 2025

விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

இந்த விழாவில் அரங்கத்திற்குள் செல்வதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதிற்கு த.வெ.க தலைவர் விஜய், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் தெரிவித்துள்ளது.

Latest news