Sunday, June 1, 2025

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. மே 1 முதல் அமல்

நாடு முழுவதும் ரயில்களில் தினந்தோறும் மில்லியன் கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மே 1, 2025 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாறப்போவதாக ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரை நேரடியாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

காத்திருப்பு டிக்கெட்டுகளில் இப்போது ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுப் பெட்டிகளில் மட்டுமே காத்திருப்பு டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும்.

முன்பதிவு செய்யும் கால எல்லை தற்போதைய 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுகிறது. அதோடு, டிக்கெட் முன்பதிவுக்கும், ரத்து செய்தலும், உடனடி ஒதுக்கீடு (Tatkal) முறைக்கும் வசூலிக்கப்படும் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news