Sunday, December 28, 2025

ஜெயக்குமார் மீதான வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த ஜெயக்குமார், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, மகேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை” என மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Related News

Latest News